Rajini Periyar Row: சென்ற வாரம் நடந்த ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு பல தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வன்றனர். ரஜினிக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்த போதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சூழல் இப்படி இருக்க, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திருமுருகன் காந்தி, ரஜினியின் கருத்துகளுக்காக அவரை “முட்டாள்” என்று சாடினார். தற்போது ஏன் அப்படியொரு காட்டமான விமர்சனத்தை வைத்தேன் என்பது குறித்து திருமுருகன் கூறியுள்ளார்.
“முட்டாள் ரஜினி… ஏன் சொன்னேன்..?”- திருமுருகன் காந்தி பரபரப்பு விளக்கம்